முகப்பு
தற்போதைய செய்திகள்

22 ஆயிரம் மருத்துவ - சுகாதாரப் பணியாளர்களுக்கு  கரோனா தொற்று!

உலகில் 52 நாடுகள் மற்றும் பகுதிகளில் 22 ஆயிரம் மருத்துவ - சுகாதாரப் பணியாளர்கள்  கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்  என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஏப்ரல், 2020 at 3:38 PM
பகிர்:

உலகில் 52 நாடுகள் மற்றும் பகுதிகளில் 22 ஆயிரம் மருத்துவ - சுகாதாரப் பணியாளர்கள்  கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்  என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்புக்குக் கடந்த புதன்கிழமை வரையிலான நிலை பற்றிக் கிடைக்கப்பட்ட தகவல்களின்படி, தொற்று காரணமாக 22,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸின்குவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை உண்மை நிலவரத்தைவிட குறைவானதாகவே இருக்கும், ஏனெனில், முறையான தகவல்கள் கிடைக்கப்பெறுவதில்லை.

Advertisement

மருத்துவ - சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முறைப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.