முகப்பு
தற்போதைய செய்திகள்

மது ஆலைகள் உற்பத்தி தொடங்க கர்நாடகம் அனுமதி

கர்நாடகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்து, பிற பகுதிகளில் மது உற்பத்தி, வடிப்பாலைகள், ஒயின் தயாரிப்பாலைகள் உற்பத்தி தொடங்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது. 

Updated On : 3 மே, 2020 at 2:32 PM
பகிர்:

பெங்களூரு: கர்நாடகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்து, பிற பகுதிகளில் மது உற்பத்தி, வடிப்பாலைகள், ஒயின் தயாரிப்பாலைகள் உற்பத்தி தொடங்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது. 

இந்த ஆலைகள் உற்பத்தி தொடங்குவதற்கான அனுமதி ஆணைகளை கர்நாடக சுங்கத் தீர்வை ஆணையர் பிறப்பித்துள்ளார்.

எனினும், இந்தத் தொழிற்சாலைகள் யாவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உற்பத்தி வேலைகளை மட்டும் செய்வதற்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநியோகம் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.