மதுரை திருநகர் காவல் நிலையம் அருகே சாக்குப்பையில் ஏர்கன் இருந்துள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன.
மதுரை திருநகர் குமாரசாமி தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார்( 39 ). இவரது வீட்டின் பின்புறம் சாக்குப்பை ஒன்று இருந்துள்ளது. அதனை எடுத்து பார்த்தபோது அதில் துப்பாக்கி ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திருநகர் காவல் நிலையத்திற்கு அவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துப்பாக்கியை சோதனையிட்டனர். அது ஏர்கன் வகையைச் சேர்ந்த துப்பாக்கி. அது எப்படி அந்த இடத்தில் வந்தது என்றும் யாராவது கொண்டு வந்து வைத்து உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.