ஆரணி: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தினையொட்டி, ஆரணி பேரூராட்சி நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் ஜிபி வெங்கடேசன் தலைமையில் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலை முன்பு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட திமுகவினர் கருணாநிதியின் முழு உருவப் படத்திற்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். இதில், முன்னாள் நகரச் செயலாளர் கண்ணதாசன் வழக்குரைஞர் அன்பு அண்ணன், முன்னாள் கவுன்சிலர் கரிகாலன் பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி பேரூராட்சி அமைந்துள்ள 15 வார்டுகளிலும் கருணாநிதியின் முழு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் ராமர் கோயில் அருகே அமைந்துள்ள கும்மடம் பகுதியில் வழக்குரைஞர் ரமேஷ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.