வங்கதேசத்தில் ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல்: 10 பேர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் குல்னா மாவட்டத்தில் 4 ஹிந்து கோயில்கள் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
ஷியாலி பகுதியில் வசித்து வந்த ஹிந்து மற்றும் இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.
இதில் ஒருதரப்பினர் ஷியாலி பகுதியில் இருந்த கோயில் மீது தாக்குதல் நடத்தி சிலைகளை சேதப்படுத்தியதாக தாக்கா டர்பைன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஷியாலி புர்பாரா பகுதியில் இருந்த ஹரி மற்றும் துர்கா கோயில்களையும் சேதப்படுத்தியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் ஒருசில கடைகள் மற்றும் இரு வீடுகளும் சேதப்படுத்தப்பட்டதாக தாக்கா டர்பைன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மோதலில் 4 கோயில்களில் 10 சிலைகள் சேதப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.