முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா 
தற்போதைய செய்திகள்

முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார்

முன்னாள் தமிழக ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா(88) உடல்நலக் குறைவு காரணமாக  இன்று சனிக்கிழமை காலை காலமானார். 

DIN


முன்னாள் தமிழக ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா(88) உடல்நலக் குறைவு காரணமாக  இன்று சனிக்கிழமை காலை காலமானார். 

ஆந்திரத்தை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா வயதுமுதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் இன்று சனிக்கிழமை (டிச.4) காலமானார். 

ரோசய்யா ஒருங்கிணைந்த ஆந்திரம் மாநிலத்தின் முதல்வராக 2009 ஆம் ஆண்டு முதல் 2010 வரை பதவி வகித்துள்ளார். 

2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். 

ஆந்திரத்தை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா, காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராக பதவிவகித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT