தில்லியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு செல்கிறார்.
சென்னை விமானநிலையத்திலிருந்து காலை 10.20 மணியளவில் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு புறப்பட்டார்.
புதுச்சேரி செல்லும் பிரதமர் அங்கு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
முன்னதாக சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரவேற்றார்.