தற்போதைய செய்திகள்

துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ. 40.35 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபையிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவா்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான நபரை அடையாளம் கண்ட அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனா். சோதனையில் 810 கிராம் எடையிலான தங்கம் அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ரூ. 40.35 லட்சம் மதிப்பிலான 810 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை

திரெளபதி அம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் 93.08 சதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT