திரைப்பட நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் வடசென்னை, ரம்மி, க/பெ.ரணசிங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தியுள்ளார்.