தற்போதைய செய்திகள்

கரோனாவால் பெற்றோர்கள் இழந்து அனாதையாகும் குழந்தைகளை அரசு அரவணைக்கும்: சிவ்ராஜ் சிங் சவுகான்

கரோனா நுண்கிருமி தொற்றால் பெற்றோர்களை இழந்து அனாதையாகும் குழந்தைகளையும், இனி மத்திய பிரதேச அரசு அரவணைக்கும் என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

DIN

போபால்: கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து அனாதையாகும் குழந்தைகளையும், இனி மத்திய பிரதேச அரசே என்று முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிதி உதவி உள்பட பல சலுகைகளைப் பெறுவதற்கான திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில், இனி அனாதையாகும் அனைத்து குழந்தைகளின் கல்வி, உணவு மற்றும் பிற தேவைகள் அரசே ஏற்கும்.

மேலும் பொற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை இனியும் எங்களால் ஒதுக்கி வைக்க இயலாது என்று செளகான் தெரிவித்தார்.

இது குறித்து விபரம் அறிந்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தொற்று நோயால் அனாதையான குழந்தைகளுக்கான திட்டம் மே 21 முதல் நடைமுறைக்கு வந்ததுள்ள நிலையில், மே 1 முதல் ஜூன் வரையிலான காலத்தையும் இது உள்ளடக்கியது என்றார்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT