தற்போதைய செய்திகள்

கரோனா பாதிப்பால் இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் உயிரிழப்பு

DIN


இந்திய முன்னாள் தடகள் வீரர் மில்கா சிங்(91) கரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மில்கா சிங், கடந்த மாதம் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் முன்னேற்றம் காணப்பட்டதை அடுத்து வீட்டுக்கு வந்தவருக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததை அடுத்து சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். 

இளம் தடகள வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக விளங்கியவர் மில்கா சிங். 
மில்கா சிங் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது மனைவி நிர்மவா கவுர் கரோனா தொற்று பாதிப்பால் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். 

ஆசிய, காமன்வெல்த், தேசிய விளையாட்டு போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வேட்டையாடியவர் மில்கா சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

SCROLL FOR NEXT