தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் புதிதாக மேலும் 251 பேருக்கு கரோனா: 3 போ் பலி

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

புதுச்சேரி மாநிலத்தில் 8,414 பேரிடம் சோதனை செய்ததில் புதுச்சேரியில் 200 பேருக்கும், காரைக்காலில் 31 பேருக்கும், ஏனாமில் 8 பேருக்கும், மாஹேவில் 12 பேர் என மொத்தம் 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,847 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,562 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்நிலையில், புதுச்சேரியில் 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,723 ஆக உயா்ந்துள்ளது.

இதனிடையே 479 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,09,562 ஆக அதிகரித்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT