முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.5.25 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.5.25 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On : 30 ஜூன் 2021, 6:25 pm IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.5.25 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்
பகிர்:

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.5.25 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னை விமான நிலைய தபால் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பார்சல்களில் சந்தேகம் கொண்ட விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழம அவற்றை சோதனையிட்டனர். 

அப்போது அதில் ரூ.5.25 லட்சம் மதிப்பிலான 105 விலையுயர்ந்த போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.  மேலும் பார்சலில் குறிப்பிடப்பட்ட முகவரி போலியானது என்பதை உறுதி செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.