ஆதரவளித்த தமிழக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி
தேர்தலில் ஆதரவளித்த தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் நன்றி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் ஆதரவளித்த தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இதுவரை 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.