முகப்பு
தற்போதைய செய்திகள்

மே 11-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11 -ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
சென்னை கலைவாணர் அரங்கம்.
பகிர்:


சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11 -ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக  சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

தமிழக  16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11 -ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கின் 3-ஆவது தளத்தில் நடைபெறுகிறது. 

அன்றைய தினம் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய பேரவை உறுப்பினர்கள் பேரவையில் பதவியேற்றுக் கொள்கின்றனர். 

தேர்தல் வெற்றி சான்றிதழை தவறாமல் உறுப்பினர்கள் கொண்டுவர வேண்டும்.

12 ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் 12 -ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →