தற்போதைய செய்திகள்

வீரகனூரில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத ஹோமியோபதி மருத்துவமனைக்கு சீல் வைப்பு, அபராதம் விதிப்பு

DIN

தம்மம்பட்டி: வீரகனூரில் சமூக இடைவெளியைக்கடைபிடிக்காத ஹோமியோபதி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினர் சீல் வைத்ததுடன், அபராதமும் விதித்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் பழைய பேருந்துநிலையம் அருகே ஹோமியோபதி மருத்துவமனை நடத்தி வருபவர் மருத்துவர் சீத்தாராமன். இவரது மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகளவில் நோயாளிகள் வந்த வண்ணம் இருந்தனர். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை, இதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக ,மாவட்ட ஆட்சியர்க்கு புகார் சென்றது.

இதனையடுத்து தலைவாசல் வட்டார மருத்துவர் லதீஸ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அல்லிமுத்து, கலியபெருமாள், சுந்தரராஜன், என்எம்எஸ் செல்வம் , வீரகனூர் காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் ஆகியோர் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்காததால், மருத்துவனைக்கு ,அதிகாரிகள் குழுவினர் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். மேலும் மருத்துவர் சீத்தாராமனுக்கு ரூ.5000 அபராதம் விதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT