தற்போதைய செய்திகள்

அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் தம்பி கே.எஸ். தஸ்தகீர் காலமானார்

DIN


தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தம்பி கே.எஸ்.தஸ்தகீர்(45) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

கே.எஸ் தஸ்தகீர் கடந்த ஒரு மாத காலமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், கரோனா தொற்று குணமடைந்த நிலையில், நுரையீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் நண்பர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த நேரில் வர வேண்டாம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT