சென்னை: தமிழகத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
மூன்றாவது அலை அச்சுறுத்தல் மற்றும் அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு ஆகியவை காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்நிலையில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் வரும் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.