கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணையை நடத்த சிபிஐ (எம்) வலியுறுத்தல்
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை குறித்து சிபிசிஐடி விசாரணையை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை குறித்து சிபிசிஐடி விசாரணையை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 40 கிராம் அளவுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கு ஈடாக பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக நிலுவை விபரங்களை ஆய்வுக்குட்படுத்திய போது ஏராளமான தவறுகளும், முறைகேடுகளும் நடந்துள்ளது தெரியவந்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,682 பேருக்கு கரோனா; 21 பேர் பலி
Advertisement
Advertisement
ஒரே நபர் 50க்கும் மேற்பட்ட கடன்களின் மூலம் 1 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளதும், போலி நகைகளின் மீதும், நகைகள் இல்லாமலேயே கடன் வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டுள்ள நகைக்கடன் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க | புடவை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த தில்லி நட்சத்திர விடுதி
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நகைக் கடன் வழங்கப்பட்டுள்ளதிலும் மெகா முறைகேடு நடந்துள்ளது பேரதிர்வை அளிக்கிறது. கடந்த அஇஅதிமுக ஆட்சியில் நடைபெற்ற இத்தகைய முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி இம்முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.