சென்னை: கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக மழை வெளுத்து வாங்கியது.
சென்னையை பொறுத்தவரை இன்று மாலை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் தென்ப்பட்ட நிலையில், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது.
கோடை வெப்பம் சென்னை வாசிகளை வீடுகளில் முடக்கி வைத்திருந்த நிலையில் திடீர் மழை மகிழ்ச்சி அளித்துள்ளது.