மழையில் நனைந்தபடி மிதிவண்டியில் பள்ளி செல்லும் மாணவர்கள். 
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் பரவலாக மழை... மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென் இந்தியப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மழை காரணமாக குடைபிடித்தபடி இருசக்கர வாகனத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள்

அதன்படி, கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எனினும் உப்பளங்களில் மழை நீர் தேங்குவதால் உப்பு உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காலையில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ - மாணவிகள், வேலைக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோா் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூா்: நாகா சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைப்பு! அமைதி காக்க முதல்வா் வேண்டுகோள்

யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி! இபிஎஃப்ஓ புதிய செயலி ஏப்ரலில் அறிமுகம்

பிப். 16,17 -இல் சென்னையில் இந்திய நூலக மாநாடு!

ஃபெடரேஷன் கோப்பை வாலிபால்: இந்திய பல்கலை. அணிக்கு வெண்கலம்

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் ஒப்புதல்

SCROLL FOR NEXT