தற்போதைய செய்திகள்

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது.

DIN

அருணாச்சலப் பிரதேசத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையை இணைக்கூடிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.

திபாங் பள்ளத்தாக்கை இணைக்கூடிய பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுவதாக அருணாசல முதல்வர் பெமா காண்டு தெரிவித்தார்.

இது குறித்து பெமா கண்டு தனது எக்ஸ் பக்கத்தில், “ஹுன்லிக்கும் அனினிக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை அறிந்து வருந்தினேன்.

இந்த சாலை, திபாங் பள்ளத்தாக்குடன் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் என்பதால், விரைவில் சாலையை சரிபடுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT