முகப்பு
தற்போதைய செய்திகள்

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கருணாநிதி பெயர் உயர்ந்து நிற்கும்

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 8:18 AM
கருணாநிதி நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்
பகிர்:

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாளையொட்டி, தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கருணாநிதி பெயர் உயர்ந்து நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களையெல்லாம் பட்டியலிட்டு - அதன் வரலாற்றைச் சொன்னால், தலைவர் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும்!

ஆறாத வடுவென - ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவர் நம்மைப் பிரிந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆறு!

இந்நாளில் அண்ணனின் அருகில் அவர் ஓய்வுகொண்டிருக்கும் கடற்கரைக்கு உடன்பிறப்புகள் சென்று, “அவர் காட்டிய வழிதனில் - அவர் கட்டிய படை பீடுநடை போடும்; தமிழும் தமிழ்நாடும் அவனிதனில் உயர்ந்து விளங்கப் பாடுபடும்!” என உறுதியெடுத்து உரமூட்டிக் கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →