மலர் சந்தையில்  ரூ.1,500 ஆக விலை அதிகரித்துள்ள மதுரை மல்லிகைப் பூ. 
தற்போதைய செய்திகள்

மதுரையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனை

மதுரையில் பூ சந்தைக்கு வரத்துக்குறைவால் புதன்கிழமை ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

DIN

மதுரையில் பூ சந்தைக்கு வரத்துக்குறைவால் புதன்கிழமை ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆடி மாதத்தில் கோயில் திருவிழாக்கள் நீங்கலாக, பிற சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறுவதில்லை. இதனால் வெள்ளிக்கிழமை பூஜைகளுக்காக வியாழக்கிழமை மட்டுமே பூக்களின் தேவை அதிகரித்து வந்தது. பிற நாள்களில் பூக்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த வாரம் ஆடி 18 என அழைக்கப்படும் ஆடிப் பெருக்கு திருவிழாவுக்காக மதுரை பூ சந்தையில் பூக்களில் விலை சற்று உயர்ந்தது. பின்னர் அடுத்தடுத்த நாள்களில் குறைந்து விற்பனையானது.

இந்த நிலையில், மதுரை பூ சந்தைக்கு மல்லிகைப் பூ வரத்துக்குறைந்ததால் மல்லிகைப் பூ விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,500 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயா்வால் மல்லிகைப்பூ பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஆடி வெள்ளி, ஆவணி மாதம் தொடக்கம் மற்றும் முகூர்த்த நாள்கள் வரவுள்ள நிலையில் வரும் நாள்களில் பூக்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், பூக்களின் விலை இன்னும் உயரும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT