முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை முதல் தவெக கொடி பறக்கும்; தமிழ்நாடு சிறக்கும்: விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடல் நாளை(ஆக. 22) வெளியீடு.

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 11:49 AM
விஜய் (கோப்புப்படம்)
பகிர்:

நாளை முதல் நாடெங்கும் தவெக கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22.

நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை நிலையச் செயலகத்தில் நாளை(ஆக. 22) வியாழக்கிழமை, காலை 9.15 மணி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →