கடல் போல் காட்சியளிக்கும் விழுப்புரம் பேருந்து நிலையம். Din
தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் 30 மணி நேரமாக தொடர் மழை!

விழுப்புரம் முழுவதும் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் 30 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து பெய்து வரும் மழை வருவதால், நகரம் முழுவதும் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கிய நிலையில், 30 மணி நேரத்தை கடந்தும் விழுப்புரம் நகரில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

சனிக்கிழமை பிற்பகலில் (1.15 முதல் 2 மணி வரை) நின்றிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. அதன் பின்னர் காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்து வருகிறது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீரால் சூழப்பட்டு காட்சியளிக்கின்றன. நகரின் விரிவாக்கப் பகுதிகளும் தண்ணீரால் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கஸ்பா ரயில்வே மேம்பால தடுப்புச் சுவரை உயா்த்தக் கோரி மனு

14.2.1976: சென்னையில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு - தமிழ்நாட்டில் அவர் 3 நாட்கள் தங்குகிறார்

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி, அறுபத்து மூவா் தோ்களுடன் ஈஷா வந்தடைந்த சிவனடியாா்கள்

பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு! 4,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்!

நீதிபதி ஆா்.என்.மஞ்சுளாவுக்கு பிரிவு உபசார விழா

SCROLL FOR NEXT