தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கல்!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ. 5 லட்சம் வழங்கினார்.

DIN

சென்னை வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான சக்திவேல் குடும்பத்துக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ. 5 லட்சம் வழங்கினார்.

வேளச்சேரி விஜயநகா் முதல் பிரதான சாலை 2-ஆவது குறுக்குத் தெரு வழியாக சக்திவேல் சென்றுக்கொண்டிருந்தபோது, புயல் காரணமாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் எதிா்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி அவர் பலியானார்.

அவரது குடும்பத்துக்கு மின்சார வாரியம் சாா்பாக ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் காசோலையை சக்திவேல் குடும்பத்தாருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT