மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கல்!
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ. 5 லட்சம் வழங்கினார்.
சென்னை வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான சக்திவேல் குடும்பத்துக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ. 5 லட்சம் வழங்கினார்.
வேளச்சேரி விஜயநகா் முதல் பிரதான சாலை 2-ஆவது குறுக்குத் தெரு வழியாக சக்திவேல் சென்றுக்கொண்டிருந்தபோது, புயல் காரணமாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் எதிா்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி அவர் பலியானார்.
இதையும் படிக்க: விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!
Advertisement
Advertisement
அவரது குடும்பத்துக்கு மின்சார வாரியம் சாா்பாக ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் காசோலையை சக்திவேல் குடும்பத்தாருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.