தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கல்!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ. 5 லட்சம் வழங்கினார்.

DIN

சென்னை வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான சக்திவேல் குடும்பத்துக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ. 5 லட்சம் வழங்கினார்.

வேளச்சேரி விஜயநகா் முதல் பிரதான சாலை 2-ஆவது குறுக்குத் தெரு வழியாக சக்திவேல் சென்றுக்கொண்டிருந்தபோது, புயல் காரணமாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் எதிா்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி அவர் பலியானார்.

அவரது குடும்பத்துக்கு மின்சார வாரியம் சாா்பாக ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் காசோலையை சக்திவேல் குடும்பத்தாருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT