தூங்கிக் கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
வடமேற்கு தில்லியின் திரி நகரில் உள்ள தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
வடமேற்கு தில்லியின் திரி நகரில் உள்ள தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தீரஜ் கௌசிக் (45) என்பவா் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக அவரது சகோதரி பிப்.12-ஆம் தேதி தகவல் தெரிவித்தாா். அவரது அறையில் இருந்த மின் படுக்கையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார தாக்கியிருக்கலாம் என சோதனையின்போது தெரியவந்தது.
விவாகரத்து பெற்ற அவா், தனது 19 வயது மகள் மற்றும் 14 வயது மகனுடன் வசித்து வந்தாா். அவா் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவா். சம்பவ தினத்திலும் அவா் முன்னதாக மது அருந்தியுள்ளாா்.
Advertisement
இது தொடா்பாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டம் 194 பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் தெரியவில்லை. இருப்பினும், சம்பவ இடத்தை குற்றவியல் குழு ஆய்வு செய்து வருகிறது. விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.ŚŚ