FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது?

சென்னையில் டிச. 11, 12 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.

Updated On : 9 டிசம்பர் 2024, 2:18 pm IST
புயல் சின்னம்
பகிர்:

வடதமிழகத்தில் டெல்டா முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டிச. 11, 12 ஆகிய தேதிகளிலும், தென் தமிழகத்தில் டிச. 13, 14 ஆகிய தேதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மென் என்று அழைப்படும் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 11, 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், சமாளிக்ககூடிய மழையாகவே இருக்கும்.

Advertisement

Advertisement

அதேபோல், டிச. 11, 12 ஆகிய தேதிகளில் நாகை, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மட்டும் மழைக்கான சாதகமில்லா சூழல் நிலவுகிறது. தென் தமிழகம் உள்ளிட்ட ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் டிச. 13,14 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும், ஆனால் வட தமிழகத்தை ஒப்பிடும்போது குறைவான மழைப்பொழிவு இருக்கும்.

காற்றழுத்தம் மன்னார் வளைகுடா வழியாக அரபிக்கடலுக்குள் செல்லும்போது உள் தமிழகம், மேற்கு தமிழகத்தில் ஒரு நாள் மழை பெய்யும்.

கிறிஸ்துமஸ் வரை வடகிழக்குப் பருவ மழை பெய்யும். தமிழகத்தில் 500 மி.மீ. வரையும், சென்னையில் 1000 மி.மீ. வரையும் மழை பதிவாகும்.

தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக தீவிரமடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. வரும் டிச. 16-18 வரையிலான தேதியில் புதிய புயல் சின்னம் உருவாகவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments