சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர். 
தற்போதைய செய்திகள்

சாத்தூர் பகுதிகளில் கனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி

சாத்தூர் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது...

DIN

சாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.சாத்தூர் நகர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளான இருக்கன்குடி,மேட்டமலை படந்தால்,சத்திரப்பட்டி, ஏழாயிரம்பண்ணை,தாயில்பட்டி, வெம்பக்கோட்டை,பெத்து ரெட்டி பட்டி,சின்னதம்பியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் இரண்டாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

வெள்ளிக்கிழமை காா்த்திகை வழிபாடு நடைபெறவுள்ள நிலையில், சந்தையில் அகல் விளக்கு மற்றும் பிற பொருள்கள் வாங்க முடியாமல் மக்கள் தவித்தனா். 2 நாள்களாக தொடரும் மழையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் தேங்கி நிற்கிறது. இதில் பெத்து ரெட்டி பட்டி, சின்னதம்பியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து கிராமம் தனித்தீவாக காட்சியளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாத்தூர் வெம்பக்கோட்டை ஏழாயிரம் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நீராவிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய்கள் நிறைந்து விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்ணைத் துன்புறுத்தக் கூடாது: காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

வங்கிக் கடன் மோசடி: அனில் அம்பானி, மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை: கூடுதல் விவரம் கேட்டு திருப்பி அனுப்பியது மத்திய அரசு

சபரிமலையில் பக்தா்கள் வெள்ளம்: தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருப்பு

கைவினைஞா்களுக்கு விருது: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

SCROLL FOR NEXT