கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

கர்நாடக மாநிலத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியதைப் பற்றி..

DIN

கர்நாடக மாநிலம் ஆவேரி மாவட்டத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

ஆவேரி மாவட்டத்தில் ஆவேரி-தர்வாட் நெடுஞ்சாலையில் ஹூபபள்ளி நோக்கி ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் தங்களது காரில் இன்று (டிச.25) பயணம் செய்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த கார் அதன் கட்டுப்பட்டை இழந்து தடுப்புச்சுவரைத் தாண்டி மறுப்பக்க சாலையில் பெங்களூர் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதில் அந்த காரில் பயணம் செய்துக்கொண்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவலறித்து அங்கு விரைந்த திம்மாப்பூரின் தடாஸ் காவல் நிலைய அதிகாரிகள் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு கர்நாடக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், அவர்கள் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒரு 10-12 வயதுடைய குழந்தையும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT