முகப்பு
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

கர்நாடக மாநிலத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியதைப் பற்றி..

Updated On : 25 டிசம்பர் 2024, 6:01 pm IST
கோப்புப்படம்
பகிர்:

கர்நாடக மாநிலம் ஆவேரி மாவட்டத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

ஆவேரி மாவட்டத்தில் ஆவேரி-தர்வாட் நெடுஞ்சாலையில் ஹூபபள்ளி நோக்கி ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் தங்களது காரில் இன்று (டிச.25) பயணம் செய்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த கார் அதன் கட்டுப்பட்டை இழந்து தடுப்புச்சுவரைத் தாண்டி மறுப்பக்க சாலையில் பெங்களூர் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதியுள்ளது.

Advertisement

Advertisement

இதில் அந்த காரில் பயணம் செய்துக்கொண்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவலறித்து அங்கு விரைந்த திம்மாப்பூரின் தடாஸ் காவல் நிலைய அதிகாரிகள் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு கர்நாடக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், அவர்கள் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒரு 10-12 வயதுடைய குழந்தையும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.