49 ஆண்டுகள் கழித்து குடும்பத்தோடு இணைந்த பெண்!
உத்தரப் பிரதேசத்தில் 49 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைந்த பெண்ணைப் பற்றி..
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் சிறுமியாக காணாமல்போன பெண் 49 ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
ஃபுல்மதி (எ) ஃபுலா தேவி, தற்போது 57 வயதாகும் இவர் கடந்த 1975 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியாக இருந்தப்போது தனது தாயுடன் பொருள்காட்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஒரு வயதான நபரால் கடத்தப்பட்டு அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் விற்கப்பட்டுள்ளார். ராம்பூரில் வளர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தாலும் பிரிக்கப்பட்ட தனது குடும்பத்தினரை அவர் தேடிவந்துள்ளார்.
Advertisement
Advertisement
ஆசம்கரிலுள்ள தனது உறவினர்களை பல ஆண்டுகளாக அவர் தேடி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஃபுலா தேவியைப் பற்றி ராம்பூரைச் சேர்ந்த பேராசிரியை பூஜா ராணி என்பவர் காவல்துறை உயர் அதிகாரி ஹேம்ராஜ் மீனா என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரும் ஆப்ரேஷன் முஸ்கான் எனும் திட்டத்தின் மூலமாக ஃபுலா தேவியின் சகோதரரான லால்தார் ஆசம்கரின் பெட்பூர் கிராமத்தில் வாழ்வது கண்டுப்பிடிக்கப்பட்டது.
பின்னர், காணமல் போன சிறுமி ஃபுலா தேவிதான் என்பது உறுதியானதைத் தொடர்ந்து அவர்களது குடும்பங்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
49 வருடங்கள் கழித்து குடும்பத்தோடு ஃபுலா தேவி இணைந்தது மிகவும் நெகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது.
மேலும், இதறகாக உழைத்த ஆசம்கர் காவதுறையினருக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணமுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.