முகப்பு
தற்போதைய செய்திகள்

வேங்கைவயல்: உண்மை கண்டறிய அனுமதி கோரிய மனு தள்ளுபடி

வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 12 பிப்ரவரி, 2024 at 12:39 PM
Vengaivayal case
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிச. 26ஆம் தேதி தெரியவந்தது. 

200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி, 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்ட சூழலில், அடுத்தகட்டமாக 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த சிபி சிஐடி போலீஸார் முடிவு செய்திருந்தனர். 

இதற்கு அனுமதி கோரும் மனு மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →