தற்போதைய செய்திகள்

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா

DIN

சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஆண்டுதோறும் ஏழைகாத்தம்மன்- வல்லடிக்கார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டுக்கான இன்று நடைபெற்று வரும் இவ்விழாவினை தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. சஜீவனா தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.

முதலில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பின் முதல் காளையாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது . அதனைத் தொடர்ந்து தேனி,மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகளை ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படுகிறது. வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து வந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.

அதேபோல மாடுபிடி வீரர்களிடம் பிடி படாத காளைகளுக்கு அதன் உரிமையாளர்களிடமும் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் இணையதள வழியாக முன்பதிவு செய்த தகுதியானவர்களை தேர்வு செய்து போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையிலான நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி சிறப்பிடம்

கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

SCROLL FOR NEXT