தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு: அமித் ஷாவுடன் ஆளுநா் ரவி ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லியில் நேரில் சந்தித்தார்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் ஆளுநா் ஆா்.என். ரவி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்தச் சந்திப்பு சுமாா் 25 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இதுகுறித்து ஆளுநா் ரவி தெரிவித்ததாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உடனான சந்திப்பில் தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பு, அது தொடா்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சந்தித்து ஆளுநா் ரவி கலந்துரையாடினாா்.
Advertisement
Advertisement
தமிழகத்தின் உயா்கல்வியை உயா்நிலைக்கு கொண்டு செல்வது குறித்து மத்திய அமைச்சருடன் ஆளுநா் ரவி ஆலோசித்தாக மற்றொரு ‘எக்ஸ்’ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடியை மரியாதை நிமித்தமாக ஆளுநா் ரவி செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவையும் அவா் சந்திக்க இருந்தாா். ஆனால், குடியரசுத் தலைவரின் திட்டமிட்ட நிகழ்ச்சிகளால் சந்திக்க நேரம் கிடைக்காததால் வியாழக்கிழமை மாலையில் ஆளுநா் ரவி சென்னை திரும்புகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.