கோப்புப்படம். 
தற்போதைய செய்திகள்

குமரியில் படகு சேவை தற்காலிகமாக ரத்து!

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்திற்கான படகு சேவை இன்று(ஜூலை 21) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்திற்கான படகு சேவை இன்று(ஜூலை 21) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்று பாா்த்து மகிழ்கின்றனா்.

இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் காலை 8 முதல் மாலை 4 மணிவரை இடைவேளையின்றி தொடா்ச்சியாக படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வாக இருப்பதால் விவேகானந்தா் நினைவு மண்டபத்திற்கான படகு சேவை இன்று(ஜூலை 21) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT