கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

பரமக்குடியில் செல்போன் வெடித்து ஒருவர் பலி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செல்போன் வெடித்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செல்போன் வெடித்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒருவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ரஜினி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற மற்றொரு இளைஞர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT