கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது!

DIN

ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டுப் பெற்று சுமார் 500 விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில், இன்று மீனவர்கள் அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்தனர்.

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் பிடித்துச் சென்று காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT