முகப்பு
தற்போதைய செய்திகள்

குன்றத்தூரில் பரபரப்பு! குடோன் தீப்பிடித்து எரிந்தது!

குடோன் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

Updated On : 28 ஜூலை, 2024 at 6:35 AM
பகிர்:

குன்றத்தூரில் குடோன் தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை குன்றத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பொருள்கள் சேமித்து வைக்கும் குடோன் செயல்பட்டு வந்தது.

அங்கு பழைய பொருள்களை தரம் பரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென குடோன் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைக் கண்டதும் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் வெளியேறினர்.

அருகில் குடியிருப்பு வாசிகள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோன் முழுவதும் தீ பரவியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் குடோன் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

மேலும், தீ விபத்திற்கு காரணம் மின்கசிவா அல்லது நாசவேலை காரணமா என குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.