முகப்பு
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
தற்போதைய செய்திகள்

’சத்தியமே லட்சியமாய் கொள்ளடா': தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து!

மக்களவைத் தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தோல்வி குறித்து தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய செய்திகள்

’சத்தியமே லட்சியமாய் கொள்ளடா': தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து!

மக்களவைத் தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தோல்வி குறித்து தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

Updated On : 4 ஜூன், 2024 at 2:48 PM
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
பகிர்:

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்து அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமூக வலைத்தளங்களில் தேர்தல் தோல்வி குறித்து தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

அந்தப் பதிவில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன.

தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, அஇஅதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், “எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" என்னும் எம்ஜிஆரின் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு அவை நமக்கு என்றைக்கும் வழிகாட்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →