மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
மார்க்சிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போதைய செய்திகள்மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
மார்க்சிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக நாகை எம்எல்ஏ மாலி சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
கேள்வி நேரத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூ. நாகை எம்எல்ஏ மாலி மார்க்சிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டது கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக சட்டப்பேரவை முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்:
மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதலில் ஈடுபட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதியப்பட்டுள்ளது. பிற்போக்குத்தனமான குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு புதிய சட்டங்கள் இயற்ற தேவையில்லை, ஏற்கெனவே உள்ள சட்டங்களை முறைப்படுத்தினாலே போதும் என்று அவர் பதிலளித்தார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை இன்று ஒருநாள் பேரவையில் பங்கேற்கத் தடை விதித்து அவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.