"நீட் முறைகேடு" இதனை அவசர பிரச்னையாக அவையில் விவாதிக்க வேண்டுமென வெள்ளிக்கிழமை ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு கைகளில் எழுதி கொடுத்துள்ள நோட்டீஸ்  
தற்போதைய செய்திகள்

நீட்டைப் பேச மாட்டோம் என்றால் அதன்பின் உள்ள அதிகாரம் யாருடையது ? - சு. வெங்கடேசன் எம்.பி

அவையைக் கூட ஒத்திப் போடுவோம் ஆனால் நீட்டைப் பேச மாட்டோம் என்றால் அதன்பின் உள்ள அதிகாரம் யாருடையது ? என்று வெங்கடேசன் எம்.பி கேள்வி

Venkatesan, DIN

புதுதில்லி: அவையைக் கூட ஒத்திப் போடுவோம் ஆனால் நீட்டைப் பேச மாட்டோம் என்றால் அதன்பின் உள்ள அதிகாரம் யாருடையது ? என்று வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

நீட் தேர்வு குறித்து எதிர்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுக்க முடிவுவெடுத்த பின் வியாழன் இரவு முதல் எங்களின் மின்னஞ்சல் வசதிகள் காலாவதியாகிவிட்டதாகச் சொல்லி முடக்குவது தான் பாஜகவின் ஜனநாயக மரபு.

இந்தச் செயலுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும்.

"நீட் முறைகேடு" "நீட்டே ஒரு முறைகேடு தான்" இதனை அவசர பிரச்னையாக அவையில் விவாதிக்க வேண்டுமென வெள்ளிக்கிழமை ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு கைகளில் எழுதி நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.

நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க நாங்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க மறுத்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார் சபாநாயகர் .

அவையைக் கூட ஒத்திப் போடுவோம் ஆனால் நீட்டைப் பேச மாட்டோம் என்றால் அதன்பின் உள்ள அதிகாரம் யாருடையது ? என்று வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி நெருங்குவதால் ஜவுளிக் கடைகளில் குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

14 குழந்தைகள் இறப்பு: ம.பி.யில் மருத்துவா் கைது! இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு!

ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு குழாய் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

‘கோல்ட்ரிஃப்’ மருந்து உற்பத்தி நிறுவன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

நாகநாத சுவாமி கோயில் பாலாலயம்

SCROLL FOR NEXT