தற்போதைய செய்திகள்

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

DIN

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை மற்றும் உலக புகழ்பெற்ற 126-ஆவது மலா்க் கண்காட்சி மே 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், அதிக சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வரும் 7ஆம் தேதி முதல் உதகை செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையின் தனியார் வாகனங்கள் வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏஐ பயன்பாட்டால் எஸ்ஐஆரில் குளறுபடி: தோ்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்

சிங்கப்பூா்: புலம்பெயா் தொழிலாளா்களுடன் இந்திய தூதரகம் பொங்கல் கொண்டாட்டம்

காஷ்மீா் எல்லையில் காட்டுத் தீ! கண்ணி வெடிகள் வெடித்ததால் பதற்றம்!

மகாத்மா காந்தியின் போதனைகள் தற்காலத்துக்கு மிகவும் அவசியம்: ஜொ்மனி பிரதமா்

தொழில்நுட்பக் கோளாறு: இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-62!

SCROLL FOR NEXT