FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

கர்நாடக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரக் காணொளிகள் பதிவிடப்பட்டுள்ளன.

5 மே 2024, 1:25 pm IST
காணொளியில் பகிரப்பட்ட படங்கள்
பகிர்:

நடப்பு மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரம் பாஜகவினரால் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நம் நாட்டின் வளங்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு வழங்கி விடுவார்கள் என்று, பிரதமர் தொடங்கி பல பாஜக தலைவர்களும் மிகவும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

தேர்தல் ஆணையமும், இதுவரையில் இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, நேற்று (மே - 4) கர்நாடக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் மேலும் ஒரு கேலிச்சித்திரக் காணொளி பதிவிடப்பட்டுள்ளது.

ஜாக்கிரதை என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தக் காணொளியில், ராகுல் காந்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் இணைந்து ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடுகளுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டையும் சேர்ப்பதாகவும், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்குவதால் அவர்கள் வளர்ந்து மற்றவர்களின் இடஒதுக்கீட்டை முழுவதும் பறிப்பதுமாக அந்த காணொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுபோன்ற வெறுப்புப் பிரசாரத்தை பாஜக தொடர்ந்து செய்து வந்தாலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யும் என்று எதிர் கட்சியினரும், சமூக வலைதளப் பயனாளர்களும் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், பாஜக இந்தியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக வெளியிட்ட காணொளியை எதிர்ப்புகள் எழுந்ததும் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments