தற்போதைய செய்திகள்

தமிழக பெண் காவல் அதிகாரி மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் உயர்பதவியில் நியமனம்!

ஆர்.பொன்னி ஐபிஎஸ் மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் டிஐஜி பதவியேற்பு.

Sakthivel

ஆர்.பொன்னி ஐபிஎஸ் மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் டிஐஜியாக பதவியேற்றுக்கொண்டார்.

2008-ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.பொன்னி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். சென்னையில் காவல் உதவி ஆணையர் (ஏசிபி), மதுரை மற்றும் திருநெல்வேலியில் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மற்றும் சென்னையில் குற்றப் பிரிவு டிஐஜி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

பொன்னி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் முதுகலைப் பட்டம்பெற்ற உயர் தகுதிவாய்ந்த அதிகாரி. சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கத்தையும் பெற்றவர்.

தமிழகத்தினைப் பொறுத்தவரையில், தமிழகத்தின் காஞ்சிபுரம் ரேஞ்ச் காவல் துணைக் கண்காணிப்பாளராக (டிஐஜிபி) நியமிக்கப்பட்ட இவர்தான், இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்.

காஞ்சிபுரம் ரேஞ்ச் டிஐஜிபியாக பொன்னி பதவியேற்றது, காவல் துறையில் பெண்களுக்கான குறிப்பிடத்தக்க மைல்கல்.

இவர் தற்போது, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எஃப்) துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இப்பதவியில் ஐந்து ஆண்டுகளுக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் இருப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT