தொடர் மழையின் காரணமாக முட்டல் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி நீர்.  
தற்போதைய செய்திகள்

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

ஆத்தூர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக, நீர்வரத்து வரத் தொடங்கிய நிலையில் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

DIN

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக, நீர்வரத்து வரத் தொடங்கிய நிலையில் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

சேலம் மாவட்ட மக்களை கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அதிகபட்சமாக 108.2 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவானது. வெயிலின் தாக்கம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை கடும் அவதிக்குள்ளாகினா்.

கடந்த 4 ஆம் தேதி கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீா்த்த கனமழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தொடா்ந்து, கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசுகிறது. தொடா் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

இந்த நிலையில்,சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக, ஆத்தூர் வனச்சரகத்திற்கு உள்பட்ட முட்டல் கிராமத்தில் உள்ள ஆனைவாரி நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்து வரத் தொடங்கிய நிலையில் உயிர் பெற்ற நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

SCROLL FOR NEXT