இடிந்து விழுந்த 3 மாடிக் கட்டடம். படம்: PTI
தற்போதைய செய்திகள்

கர்நாடகம்: 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

கர்நாடகத்தில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக...

DIN

கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரப்பேட்டை நகரில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.

ராஜ் குமார் என்பவருக்கு சொந்தமான 3 மாடிக் கட்டடத்தின் தரைத் தளத்தில் புதுப்பிக்கும் பணி மேற்கொண்டிருந்தபோது, முக்கியமான பில்லரை இடித்ததால் 3 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தின்போது, குடியுருப்பில் சிக்கிய 3 குடும்பங்களை தீயணைப்புத் துறையினர் வெளியேற்றினர்.

மேலும், கட்டடம் இடிந்து விழுந்ததில் எதிரேயுள்ள தனியார் பள்ளியின் வளாகமும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை யாருக்கும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறை! சவூதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை! ஒரே கண்டீஷன்?

என்னை வாழவைக்கும் தமிழ்த் தெய்வங்களான... ரஜினிகாந்த் பிறந்த நாள் ஸ்பெஷல்!

வெலிங்டன் டெஸ்ட்: ஜேக்கப் டஃபி உதவியால் நியூசிலாந்து அபார வெற்றி!

ஆந்திரத்தில் ஆன்மிக சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் பலி! 15 பேர் காயம்!

பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த சேகர் காலமானார்!

SCROLL FOR NEXT