2026 தேர்தல் பணியைத் தொடங்கிய தேமுதிக!
234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம்.
இன்று(நவ. 10) நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்த நிலையில், மாவட்டச் செயலர்கள் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ரூ. 10 கோடி கேட்டு எம்.எல்.ஏ. மகன் கடத்தல்! தப்பித்தது எப்படி?
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை அமைத்திடவும், 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கவும் மாவட்டச் செயலர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, கனிமவளக் கொள்ளை அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.