முகப்பு
தற்போதைய செய்திகள்

மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!

ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Updated On : 17 நவம்பர் 2024, 9:37 am IST
மழை (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று(நவ. 17) காலை/மதியம்வரை மழை பெய்யும். அதன்பிறகு ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்ல்லை.

Advertisement

Advertisement

நவ. 17, 18 ஆகிய தேதிகளில் டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவடையவில்லை, பருவமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளது.

இந்த மாத இறுதியில் சக்கரம் ஒன்று தமிழகத்தை நோக்கி வருகிறது. அந்த சக்கரம் தீவிரமடையுமா? அல்லது அதற்கு பெயர் வைக்கப்படுமா? என்பதை கண்காணிக்க 10-12 நாள்கள் ஆகும் என்று அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.