முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தார் .

Updated On : 20 நவம்பர், 2024 at 5:24 AM
ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி பலி
பகிர்:

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தார் .

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் தங்க ராஜா (55). விவசாய கூலித் தொழிலாளியான இவர் அந்த குதியில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் விவசாய பணிக்காக சென்றார்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை அந்த பகுதியில் மிதமான மழை பெய்தது. அப்போது, தொழிலாளி தங்க ராஜா மின்மோட்டாரை இயக்கும்போது மின்சாரம் கசிந்து அவர் மேல் பாய்ந்தது. இதில் தங்க ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

வீர கேரளம் புதூர் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →